சிஐடியு போடி தாலுகா மாநாடு
தேனி, ஜூலை 24- போடி தாலுகா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க மாநாடு தாலுகா தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராமசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஏ.முருகவேல் தொடக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் பி.சந்திரசேகர்,வரவு செலவு அறிக்கையை டி.விருமாண்டி ஆகியோர் சமர்ப் பித்தனர்.மாவட்டத் தலைவர் சி.முருகன் நிறைவு செய்து பேசினார். தாலுகா தலைவராக எஸ்.நாகராஜன், செயலாளராக பி.சந்திரசேகர், பொருளாளர் ஜி.சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சரக்கு வாகனம் மீது கார் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி
அருப்புக்கோட்டை, ஜூலை 24- அருப்புக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம டைந்தனர். இராமநாதபுரம் மாவட்டம், கழுவன் பொட்டலைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் தனது மனைவி லட்சுமி, மகன் மதிமாறன் உள்பட 16 பேர் சரக்கு வாகனத்தில் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவி லுக்கு சாமி கும்பிடச் சென்றனர். பின்பு, அங்கிருந்து மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தனர். மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையில் வ. வேலாயுதபுரம் விலக்கு பகுதியில் வாகனத்தை நிறுத்தி யுள்ளனர். அப்போது, தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மின்னல் வேகத்தில் சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் வந்த சரத்குமா ரின் மகன் மதிமாறன் மற்றும் அவரது உறவினர் பவித்ரா, பெருமாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை, ஜூலை 24- சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் சில ரயில்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28, ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787), சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31 ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டிகர் விரைவு ரயில் (12687), ஓகாவில் இருந்து ஜூலை 29 ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567), கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616), தூத்துக்குடியிலிருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (17615), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதை யில் இயக்கப்படும்.
வீடு புகுந்து கரடி தாக்கியதில் பெண் காயம்
கடமலைக்குண்டு, ஜூலை 24- தேனி மாவட்டம், வருசநாடு அருகே அரண்மனைப் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவர் அரண்மனைப்புதூர் அருகே தோட்ட வீட்டில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் செல்லக்குட்டி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 55). தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணி யளவில் அரண்மனைப்புதூர் வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்த கரடி செல்லக்குட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பாண்டியம் மாளை தாக்கியது. அப்போது பாண்டியம்மாள் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கரடி வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடிச்சென் றது. கரடி தாக்கியதில் பாண்டியம்மாளுக்கு கை மற்றும் தலை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. தற்போது பாண்டி யம்மாள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூர் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை
அருப்புக்கோட்டை, ஜூலை.24- அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பாண்டியன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதி மணி ஆகியோர் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் 2-வது வடக்கு தெரு வில் குடியிருந்தனர். இவர்கள் இருவரையும் வீட்டில் இருந்த போது, உள்ளே புகுந்த மர்ம நபர்கள். கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் தடயங்களை அழிப்பதற்காக மிளகாய்ப் பொடியையும் தூவி விட்டுச் சென்றனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனிர். இதில், அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி, இராமநாத புரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்புடையவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
சிறப்பு பேருந்துகள் இயக்காததால் தாமதம் தேர்வு எழுத முடியாமல் 15 பேர் ஏமாற்றம்
வேடசந்தூர், ஜூலை 24- வேடசந்தூர் அருகே நடந்த தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்விற்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்கா ததால பெண்கள் கதறி அழுதனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4க்கான தேர்வு வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் ஒரு தனியார் கல்லூரியில் ஜூலை 24 ஞாயிறன்று நடைபெற்றது. இத்தேர்வில் பங் கேற்பதற்காக திண்டுக்கல் அதன் சுற்றுப்பகுதி கிரா மத்தில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் தேர்வு தொடங்கிய பிறகு தாமதமாக வந்தனர். இதானல் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. இதனால் தேர்வு எழுத வந்த பெண்கள் பல வருடம் படித்து தேர்வு எழுதமுடியவில்லையே என்று கதறி அழுதனர். நவாமரத்துப்பட்டியில் இருந்து 2 கி.மீ. தூரமுள்ள பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. நடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தேர்விற்கு சிறப்பு அரசு பேருந்து இயக்கப்படாததா லும், அவரவர் சொந்த ஊருக்கு அருகே தேர்வு மையங் கள் ஒதுக்கப்படாததாலும் 15க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
சிபிஎம் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற ஒப்புதல்
இராஜபாளையம், ஜூலை 24 இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சேத்தூர் பேருந்து நிலையம் கீழ்புறம் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ பாளையம் மேற்கு ஒன்றியக் குழு தொடர்ச்சியாக வலி யுறுத்தி வந்தது.இதனால் ராஜபாளையம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் வருகிற 15 ஆம் தேதிக்குள் கடையை அகற்றி விடுவோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் பூட்டு போடும் போராட்டம் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்க வில்லையெனில் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் ஒன்றியக்குழு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார் ,குருவு குருநாதன், கனகராஜ், ஆர்.எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
பொதுத்தொழிலாளர் சங்க பேரவை
மதுரை, ஜூலை 24- மதுரை மேற்கு ஒன்றிய பொதுத்தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) 11 ஆம் ஆண்டுப் பேரவை எஸ்.ஆலங் குளத்தில் நடைபெற்றது. பேரவைக்கு எம்.செளந்த ராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ. மனோகரன் வேலையறிக்கை சமர்ப்பித்தார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், செ.ஆஞ்சி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.அரவிந்தன் நிறைவுரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப் பட்டனர். தலைவராக சி.எஸ்.ஜெகன்நாதன், செய லாளராக எம்.சௌந்தரராஜன், பொருளாளராக எம்.கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு தேனியில் 37,468 பேர் எழுதினர்
தேனி, ஜூலை 24- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தொகுதி – 4 தேர்வில் தேனி மாவட்டத்தில் 37,468 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்ட லர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தொகுதி-4 தேர்வு ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் 44,195 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தவர்களில் தேர்வு எழுதுவதற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதில் 37,468 தேர் வர்கள் தேர்வு எழுதினர். 727 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மேரிமாதா மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன்,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத் திறனாளிகள் சங்க அருப்புக்கோட்டை ஒன்றிய மாநாடு
அருப்புக்கோட்டை, ஜூலை 24- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் அருப்புக் கோட்டை ஒன்றிய மாநாடு வெள்ளக் கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி. அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் ஏ.கும ரேசன் பேசினார். விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங் கோதை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி செல்வகணேசன், தொழிற் சங்கத் தலைவர்கள் எஸ்.காத்தமுத்து, எம். கணேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாவட்டசெயலாளர் கே.நாகராஜன் விளக்கிப் பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். ஒன்றியத் தலைவராக பி.முத்துமாரி, செயலாளராக பி.எஸ்.சுப்புராஜ், பொரு ளாளராக எம்.இளங்கோ, துணைத்தலை வராக எம்.காமாட்சி நாதன், துணைச்செய லாளராக எஸ்.சமயன் உட்பட 16 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாலிபர் சங்க மதுரை புறநகர் பகுதிக்குழு மாநாடுகள்
மதுரை, ஜூலை 24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மேற்கு ஒன்றிய 17வது மாநாடு நடைபெற்றது. சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலா ளர் எஸ்.கார்த்திக் மாவட்டப் பொருளா ளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசி னர். ஒன்றிய தலைவராக எஸ். நவநீத கிருஷ்ணன், ஒன்றிய செயலாளராக கே. வினோத் கண்ணன், ஒன்றிய பொருளாள ராக, கலைச்செல்வி, உள்ளிட்ட 12 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை குடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூடல் நகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேற்கு ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளான பொதும்பு, குலமங்கலம், ஆனையூர் ஆகிய பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்களும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. நாகமலை பகுதிக்குழு வாலிபர் சங்கத்தின் நாகமலை பகுதி குழு 17வது மாநாடு கோதண்டராமன் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் க.தமிழரசன் பேசி னார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மாதர் சங்க சுமதி, இந்திய மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவு செய்து வைத்து சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக் பேசினார். நாகமலை பகுதிக் குழு தலைவராக ராஜசேகர், செயலாளராக திருதரன், பொரு ளாளராக பாலபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வைகை கால்வாய் திட்டத்தை கீழக் குயில்குடி வரை கொண்டு வர வேண்டும். மழைநீர் வடிகால்களை அமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறந்துபோன ஊழியர்களுக்கு ரெக்கவரி பணப்பிடித்தம் கூடாது அங்கன்வாடி, சத்துணவு ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஜுலை 24- இறந்து போன சத்துணவு ஊழியர் களுக்கு ரெக்கவரி என்ற பெயரில் பணப் பிடித்தம் செய்யாமல் அவரது வாரிசுதாரர் களுக்கு முழு பணப்பலனும் கொடுக்க வேண்டும் என்று சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநி லச்செயற்குழு வலியுறுததியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் ஞாயிறன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாராயணன் தலைமை வகித் தார். பொதுச்செயலாளர் மாயமலை, பொருளாளர் ஆனந்தவள்ளி, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்டச்செயலா ளர் செங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப் பாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (நநி)