districts

சுரபிக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீனை ரத்து செய்க!

திண்டுக்கல், டிச.13- திண்டுக்கல் வருகை தந்த குழந்தை நல உரிமை பாதுகாப்பு ஆணையரிடம் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்தனர்.  திண்டுக்கல்லுக்கு திங்களன்று வருகை தந்த ஆணையர் சரஸ்வதி ரெங்கசாமி யிடம் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராணி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சுரபிக் கல்லூரி தாளாளர் ஜோதிமுரு கன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். போக்சோ சட்டம் 44 பிரிவு படி இச்சட்டம் அமலாக்கம் செய்வதையும், இந்த வழக்கு களில் முறையாக வழக்கு நடைபெறு கிறதா? என்றும் கண்காணிக்க வேண்டும்.  திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை களுக்கெதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய வேண்டும். வழக்கை கையாள்வதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மனுக் கொடுக்கும் போது, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜானகியம்மாள், நகரச் செயலாளர் ராஜேஸ்வரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி ஆகி யோர் உடனிருந்தனர்.

;