districts

img

முதல்வர் இராமநாதபுரம் வருகை அமைச்சர்கள் ஆய்வு

இராமநாதபுரம், ஜூலை 23-  இராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதியில் ஆகஸ்ட் 17-18 இல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான இடங்களை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஆகஸ்ட் 17-18 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மாநாடு  மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான இடங்களை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பிற் படுத்தப்பட்டோர் -கதர் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சி யர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் ஞாயிறன்று இராமநாத புரம் அச்சுந்தவயல்,தேவிபட்டணம் செல்லும் வழி ஆகிய  இடங்களை ஆய்வு செய்தனர்.