மதுரை, மார்ச் 6- மனுக்கள் என்பது வெறும் காகி தம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை யும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேலூர். சேலம் மண்ட லங்களில் ஆய்வு நடத்தி முடித் துள்ள முதல்வர்மதுரை மண்ட லத்திற்குட்பட்ட மதுரை, இராம நாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து மதுரையில் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தினார். மார்ச் 5-அன்று மதுரை, இராம நாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் முனை வோர், விவசாய சங்கங்கள், மீன வர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்பு களின் பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மதுரை, இராமநாதபுரம், திண்டுக் கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். திங்களன்று ஐந்து மாவட்டங் களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் ஆட்சியர்களி டம் வலியுறுத்தி முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தென் மாவட்டங்களை பொரு ளாதார ரீதியாகவும், தொழில் ரீதி யாகவும் மேம்படுத்த வேண்டிய தன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து, அதற்கென பல திட்டங் களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில், அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட் டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கியப் பொறுப்பு ஆட்சியர்களுக்குள் ளது. குறிப்பாக, கிராமப்புற மக்க ளின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட் டங்களில், ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன் னேற்றம் எட்டப்பட வேண்டும். ஏனெனில் இவை ஏழை, எளிய மக்கள் தொடர்புடைய திட்டங்களா கும்.
உரத்த குரல் கொடுக்க முடியாதவர்கள்...
அரசு நிர்வாகம் என்பது, யாரால் உரத்த குரல் கொடுக்க முடி யாதோ அவர்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்றித் தருவதே ஆகும். சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், அரசு மருத்துவமனையை நாடும் ஏழை எளிய மக்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக் கும் மாணவ, மாணவியர், திரு நங்கையர் ஆகியவர்களின் தேவை களை, குறைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டியது நம் கடமையாகும்.
அரசுத் திட்டங்களில் சமூக நீதியின் குரல்
அரசின் முக்கியமான புதிய திட் டங்களை நீங்கள் பட்டியலிட்டுப் பார்த்தால் அவற்றில் ஓங்கி ஒலிப் பது, சமூக நீதியின் குரல். அனை வருக்குமான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாது காப்பு, தமிழ் மொழி மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மைகளைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லு தல் என்பவை குறிப்பிடத்தக்கவை யாகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பான தேவை இருக்கும். உதாரணமாக மதுரை மாவட்டத் தில் நகர்ப்புறப்பகுதிகளில் காணப் படும் சில குறிப்பிட்ட வளர்ச்சி தொடர்பான தேவைகள். தேனி, திண்டுக்கல் மாவட்டத் தில் பழவகைகள் மற்றும் காய்கறி விவசாயம் அவை தொடர்பான தேவைகள் மற்றும் மலை மாவட் டம் என்பதால் அது உருவாக்கும் சில சிறப்புத் தேவைகள். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தவரை அவ்வப்போது காணப்படும் வறட்சி நிலை, பெரும் தொழில் அமைப்புகள் இல்லாததால் அங்கு புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவை எனக் குறிப்பிடலாம். அரசின் பொதுவான திட்டங் களை செயல்படுத்துவதோடு உங்கள் மாவட்டத்திற்கே உரிய தனிப்பட்ட சூழ்நிலைக்கான திட்டங் களையும் அரசுக்கு தெரிவித்து அவற்றை செயல்படுத்த தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
மனு வெறும் காகிதம் அல்ல...
மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. இவ்வாறு முதல்வர் பேசினார். இந்தக்கூட்டத்தில், அமைச் சர்கள் கே.என்.நேரு, இ.பெரிய சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, உதய நிதி ஸ்டாலின், கே.ஆர். பெரிய கருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன், தலை மைச் செயலாளர் வெ. இறையன்பு, மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், இராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன், சிவகங்கை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.