விடுதலைப் போராட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார் வாரிசும் சிவகங்கை அரண்மனை இராணியுமான சாகிபா மதுராந்தகி நாச்சியார் ரத்த தானம் செய்தார். ரத்த தானம் செய்ததற்கான சான்றிதழை சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதிபாலன் வழங்கினார். உடன் இளைய மன்னர் மகேஷ்துரை உள்ளிட்டோர் உள்ளனர்.