districts

மதுரை முக்கிய செய்திகள்

மானிய திட்டத்தில்  நாட்டு கோழி பண்ணை அமைக்க  பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தென்காசி, ஜூலை29  நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட வேண்டியஅபயனாளிகளின் தகுதிகள்: ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன்கொண்டகிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.  2012 -13 முதல் 2017-18 வரையிலான கோழிஅபிவிருத்தி திட்டம், மற்றும் 2020-21ஆம் ஆண்டிற்கான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பில் தொழில் முனை வோர் ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயனாளி பயன டைந்து இருக்க கூடாது. அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளி 3வருடங்க ளுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட/ திட்டமிடப்பட்ட வங்கி / கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி திறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும்.  மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். விண்ணப்ப தாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று 05.08.2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா  தொழில் முனைவோருக்கு அழைப்பு

தென்காசி, ஜூலை 29  தமிழக துணிநூல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்ட மைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல  திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்ட மைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டக்கான கட்டி டங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ  2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானிய மாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து  தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்க ளையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும்  அதிக ளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை தென்காசி மாவட்டத்தில் பயன்படுத்தி  தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும்  வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனை வோரும் முன்வர வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர்  ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 39, விஸ்வ நாதபுரம் மெயின் ரோடு,  மதுரை - 14 எனும் முகவரி யில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் (தொடர்பு எண். 94435 55581) என தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற கைதி கைது

திருநெல்வேலி, ஜூலை 29- நெல்லை அரசு மருத்துவமனையில்  இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார்.  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் ஜீவா (43). இவர் வாசுதேநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை பெறப்பட்டு இருந்து வந்தார். கடந்த 22-ஆம் தேதி பிணையத்தை மீறியதற்கு, ஜீவா சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ஜீவா, மருத்துவ பரிசோதனைக்காக பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்கு இருந்து அவர்  திடீரென தப்பிச் சென்றார். இதுகுறித்து மருத்துவக்கல்லூர் மருத்துவமனை காவல் ஆய்வாளர் ஞானராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஜீவாவை தேடினர். இந்த நிலையில்  தனிப்படை போலீசார் அவரை கைது செய்து காவல்  நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தென்காசி, ஜுலை 29- தென்னக ரயில்வே மண்டல ஆலோச னைக் குழு உறுப்பினராக சமூக ஆர்வலர் தென்காசி பாண்டியராஜா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை ரயில்வே கோட்ட எல்லைக்கு  உட்பட்ட ரயில்வே வளர்ச்சி, ரயில் தேவை கள், ரயில்வே  குறைகள், ரயில்வே ஆலோசனைகள் குறித்து விவாதிப்பதற்கு, மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில் வர்த்தக சபை மற்றும் தொழில் துறை சார்ந்த 7 பேர் , விவசாய துறை சார்ந்த ஒருவர், மாற்றுத்திறனாளி சங் கத்தைச் சேர்ந்த ஒருவர்,  ரயில்  பயணிகள் சங்கத்தைச் சார்ந்த 2 பேர் ,  எம்பிக்கள் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் 13 பேர், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட சோழவந்தான் எம்எல்ஏ, மதுரை மாவட்ட ஆட்சியர்  உள்ளிட்ட 26 பேர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அறிமுகக் கூட்டம் இணைய வழியில் வியா ழக்கிழமை நடைபெற்றது. இதில் மண்டல ஆலோசனை குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 3 பேர்  போட்டியிட்ட நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர் நடந்த கூட்டத்தில் இதில் பெரும் பாலான உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை யில்,  முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்களை இணைக்கும் வகையில் இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும், ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அனைத்து ரயில்களின் ஏசி பெட்டிகளிலும் கம்பளி போர்வை உடனடியாக வழங்க வேண்டும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடும் சத்தத்தோடு டீ விற்பதை தடை செய்ய வேண்டும், ரயில் நிலைய நடைமேடைகளில்  பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, கோயமுத்தூர், பெங்களூர் நக ரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்,  நீக்கப்பட்டுள்ள முக்கிய  ரயில் நிறுத்தங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் அனை வரும் வலியுறுத்தினர். வரும் காலங்களில் இணைய வழியில் கூட்டங்கள் நடத்தாமல் நேரடியாக நடத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டது. இதில் ஒருசில ரயில் நிலையம் மேம்பாடு களை பரிசீலிப்பதாக ரயில்வே உயர் அதி காரிகள் உறுதி அளித்தனர். புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள் வழங்கும் அதிகாரம் சென்னை தலைமையகத்துக்கு தான் உண்டு எனவும்,   புதிய ரயில் பாதை திட்டங்கள் அரசின் கொள்கை முடிவுகள் என்றும் தெரிவிக்கப்பட்டது முடிவில் தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்காசி பாண்டிய ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கல்

தூத்துக்குடி, ஜூலை 29 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்க ளுக்கு தமிழக அரசின் இழப்பீட்டு தொகை வழங்கப் gட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக (Victim Compen sation Fund) தமிழக அரசு ரூ.8,17,000 வழங்கியுள்ளது.  இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளியன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார். இதில் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவிக்குமார் என்பவரை எதிரிகள் கொலை செய்த வழக்கு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் ஆதி மகன் மோகன் என்பவரை எதிரிகள் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 14 குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

சிறிய பாலத்தில் லாரி மோதி விபத்து:  போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி, ஜூலை 29 கோவில்பட்டியில் சிறிய பாலத்தில் லாரி மோதி, டயர் வெடித்து விபத்துக்குள்ளானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாம்பல் ஏற்றிக்கொண்டு லாரி  ஒன்று கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையைச் சேர்ந்த டிரைவர் கலைச் செல்வம் ஒட்டி வந்தார். லாரி கோவில் பட்டி மெயின் சாலையான மாதாங்கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் ஆகிய வற்றை இணைக்கும் முக்கிய சாலையில் வந்து கொண்டி ருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த சிறிய பாலத்தில் மோதியதால் லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளா னது. இது காலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால் அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள், மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர் கள் ஒரே இடத்தில் கூடியதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஏற்கனவே இந்த சிறிய பாலம் அமைக்கப்படும் போது இது மிகவும் நெரிசலாக, குறுகலாக அமைக்கப்பட்டுள்ள தாக குற்றம்சாட்டு எழுந்தது. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பாலத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.மேலும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க இப் பாதையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தூத்துக்குடி,  ஜூலை 29 நீராவி புதுப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) நாச்சி யார் அம்மாள் தலைமை வகித்து, கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் நோக்கம் ,செயல்பாடு அதன் முக்கியத்துவத்தை பற்றியும் திட்டத்தின் வாயி லாக விவசாயிகளுக்கு கிடைக்க பெறும் நன் மைகள் குறித்தும் எடுத்து கூறினார். நீராவி புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அண்ணமகாராஜா முன் னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் முத்துசாமி தரிசு நில மேம்பாடு, அதன் அவசி யம் பற்றி விளக்கமளித்தார். முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் கீதா வர வேற்புரை வழங்கினார். நிறைவாக உதவி வேளாண் மை அலுவலர் சுதாகர் நன்றி யுரை வழங்கினார். பயிற்சி யில் கலந்து கொண்ட விவ சாயிகளுக்கு தொழில் நுட்ப துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

3 டன் ரேசன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது

காரியாபட்டி, ஜூலை.29- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள  மல்லாங்கிணறு. பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரது கிட்டங்கி நந்திக்குண்டு கிராமத்தில் உள்ளது. அதை மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (50) என்பவர் வாட கைக்கு எடுத்துள்ளார். அங்கு மதுரையை சேர்ந்த  கணேஷ் பாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் சூரம்பட்டியை சேர்ந்த பூமி ராஜ் ஆகிய 3 பேர் வேலை செய்து வருகின்றனர்.  இவர்கள், அப்பகுதியில் கிடைக்கும் ரேசன் அரிசியை  அரைத்து 50 கிலோ மாவு மூடைகளாக பேக்கிங் செய்து,  நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி  வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 64 மூடைகளில் 3.2 டன் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. மேலும், 44 மூடைகளில் 2.2 டன் அரிசிமாவு இருந்துள்  ளது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீ சார் கணேஷ் பாண்டி முத்துகிருஷ்ணன், பூமிராஜ் ஆகிய  மூவரையும் கைது செய்தனர்.

களக்காடு அருகே  மின்னல் தாக்கி பசுமாடு பலி

திருநெல்வேலி, ஜூலை 29- திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது. இதில் வேப்பமரம் சேதமடைந்தது.  மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார். மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.

வீடு புகுந்து 3 பவுன் நகை, ரூ.50ஆயிரம் பணம் திருட்டு

தூத்துக்குடி, ஜூலை 29 நாசரேத் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.50ஆயிரம் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள பாலசுப்பிரமணியபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (42), கொத்தனார். இவர் புதனன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பியபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50,000 ரொக்கப் பணத்தை காணவில்லையாம். வீட்டுக் கதவுகள், பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. வீட்டின் சாவியை வைத்திருந்த இடத்தை அறிந்த மர்ம நபர்கள் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து நகையையும் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்று விட்டார்களாம். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்: ஆட்சியர்

தூத்துக்குடி, ஜூலை 29 மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னி லையில், அனைத்துத்துறை அலுவலர்களு டனான ஆலோசனைக் கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நினை வகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறு வனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பலதரப்பட்ட கடைகளிலும், பொது மக்கள் தங்கள் வீடுக ளிலும் வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தேசிய கொடி ஏற்றுவ தற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி டவும், சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு கலைக் குழுக்கள் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலு வலர் அபிஷேக் தோமர், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.