சிவகங்கை, ஆக.27- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் தொடங்கிய கலைப் பேரணி யை வரவேற்புக்குழு செய லாளர் சந்திரன் தொடங்கி வைத்தார். அழகப்பா பல் கலை., மேனாள் துணை வேந்தர் முனைவர் சுப் பையா தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சிவா னந்தம் வரவேற்றார். மாவட் டச் செயலாளர் முனைவர் அன்பரசன் தொடக்க உரை யாற்றினார். மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், தமு எகச மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமிகாந்தன், மாநிலக் குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்டத் தலை வர் முனைவர் தங்கமுனி யாண்டி, மாவட்டப் பொரு ளாளர் ஒயில் கலைஞர் பால முருகன் ஆகியோர் பேசி னர். புதுகைபூபாளம், கரிசல் கருணாநிதி, லிம்போ கேச வன், விருதுநகர் கோடாங்கி, பாட்டிசை நாடக கவிஞர் சேவு.முத்துக்குமார் ஆகி யோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதய சங்கர் பாராட்டு பெற்றார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பெற்ற பள்ளிகள் பாராட்டு பெற் றன. பிரகதீஸ்வரன் இயக் கத்தில் செங்கதிர் குறும் படம் திரையிடல் நடந்தது. காரைக்குடி கிளைத் தலைவர் கவிஞர் சாதிக் எழு திய ‘நேர் கோட்டு கீறல்கள்’, மாவட்டக் குழு உறுப்பினர் கவிஞர் மோகனின் ‘நீ அறி யும் பூவே கவிதை’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.