districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர், மார்ச் 16- ஹரியானா மாநிலத்தில் 80 நாட்களுக்கு மேலாக போராடி வரும் அங்கன்வாடி ஊழி யர்களுக்கு ஆதரவாக விருது நகரில் (சிஐடியு) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட் டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமையேற்றார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ராமர் பேசி னார். முடிவில் மாவட்ட உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி கண் டன உரையாற்றினார். மேலும் இதில், மாவட்ட நிர்வாகிகள் பிச்சையம்மாள், பாண்டியம் மாள், விமலாராணி, பவுன்தாய் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல்  திண்டுக்கல் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் செல்வதனபாக்கியம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முபாரக்அலி ஆகி யோர் கலந்து கொண்டனர். பொருளாளர் மல்லிகா நன்றி கூறி னார்.