districts

img

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து எஸ்எப்ஐ -மாணவர்கள் போராட்டம்

மதுரை,ஏப்.22- மதுரை மாவட்டம்  நாகமலை புதுக் கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியான ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி உள்ளது. இங்கு இளநிலை பட்டப் படிப்பிற்கு ஒரு ஆண்டிற்கு 700 ரூபாயும், அறிவியல் துறை பட்டப் படிப்பிற்கு ஆண்டிற்கு 900 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.  ஆனால், அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை விட கூடுதலாக வசூலிப்ப தாக குற்றச்சாட்டு எழுந்தது  அதாவது செமஸ்டருக்கு 350 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக 6 ஆயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்ததாக மாண வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஊடகங்களில் செய்தி வெளியிட்ட நிலையில் மாவட்ட ஆட்சி யர் விசாரணை மேற்கொண்டார்.   பின்னர் கூடுதலாக வசூலித்த கட்ட ணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  ஆனால், அந்த பணம் இதுநாள் வரை திருப்பித் தரவில்லை என்றும் இது தொடர்பாக கல்லூரி மாணவர் கள் பலமுறை முறையிட்டும் கல்லூரி நிர்வாகம் உரிய பதில் அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாழனன்று  காலை கல்லூரியின் முதல்வர் அறையின் முன்பு மாணவர்கள் நடத்திய போரா ட்டத்தில் ஒரு மாணவரை ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து,நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலின் முன்பு மாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து வெள்ளியன்று இரண்டாம் நாளாக  இந்திய மாண வர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கா.பிருந்தா, மாநிலத் துணைத் தலைவர் அரவிந்த சாமி ஆகியோர் தலைமையில்  200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  கல்லூரி வாசல் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  அதனைத்தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகம் வசூல் செய்த கூடுதல் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என  மாணவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி செயலாளர் விடுப்பில் சென்றுள்ளதாகவும் அவர் வந்த பிறகு உங்களது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள லாம் என கல்லூரி நிர்வாகம் தெரி வித்ததை தொடர்ந்து மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதுதொடர்பாக சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.