districts

img

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

தேனி ,செப்.19- தேனி மாவட்டத்தில் தலித்துகள் அல்லாதவர்கள் வைத்திருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது . இது குறித்து சங்கத்தின் தேனி  மாவட்டத் தலைவர் டி.கே.சீனிவாசன் , மாவட்ட செயலாளர் இ .தர்மர், மாவட்ட பொருளாளர்  பி.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பையா,  செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா குழு உறுப்பினர் எஸ் . கண்ணன் ஆகியோர் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை  சந்தித்து பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.