districts

img

கேரளத்தில் 44 சதவிகிதம் மழை குறைவு

திருவனந்தபுரம், ஆக.17- கேரளத்தில் பருவமழை முடிய இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், மழை இல்லாதது கவலையை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலை வெள்ளியன்று உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் பருவமழை பொய்த்து இரண்டரை மாதங்களுக்கு பின், 44 சதவிகிதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை 1572.1 மிமீ மழை பெய்ய வேண்டிய இடத்தில் 877.2 மிமீ  மழை மட்டுமே பெய்துள்ளது. மின் உற்பத்தி மையமாக விளங்கும் இடுக்கி  மாவட்டத்தில் மழை இல்லாதது மேலும் கவலையை ஏற்படுத்தி யுள்ளது. இங்கு 1956.5 மி.மீ மழை பெய்ய வேண்டிய இடத்தில் 775.4 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இடுக்கியில் 60 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது. கேரளத்தில் ஜூன் மாதம் 60 சதவிகிதம் மழை குறைவாக பெய்தது.  ஜூலையில் நல்ல மழை பெய்தது என்றாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழை  குறைவாக பெய்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்டில் இது வரை 90 சதவிகிதம் மழை பெய்ய வில்லை.  இதற்கிடையில், வெள்ளியன்று (ஆக.18) வடக்கு வங்காள விரிகுடா வில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  நிலை உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, இமயமலைப் பள்ளத் தாக்கில் பெய்துவரும் பருவமழை தெற்கு நோக்கி நகர்வதற்கான அறி குறிகள் தென்படுகின்றன. அது நடந்தால், வெள்ளிக்கிழமை முதல்  இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிக எதிர்பார்ப்புக்கு எந்த காரணமும் இல்லை என வானிலை ஆய்வாளர் ராஜீவ் எரிகுளம் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் கணிசமான மழை பெய்யவில்லை என்றால், நிலைமை மோசமாகிவிடும். இந்நிலையில், சில வானிலை அமைப்புகள் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மாக மழை பெய்யும் என்று கணித்துள் ளன. இருப்பினும், தற்போதுள்ள மழையின் பற்றாக்குறையை ஈடுசெய் யும் என்கிற நம்பிக்கை இல்லை. கேஎஸ்இபி மற்றும் நீர்ப்பாசனத் துறையின் முக்கிய அணைகள் அவற்றின் சேமிப்பு கொள்ளளவில் பாதிக்கும் குறைவாகவே உள்ளன. இடுக்கியில் 31.6 சதவிகிதமும், பம்பை யில் 2.08 சதவிகிதமும், இரட்டை யாறில் 18.23 சதவிதமும், இடைமலை யாற்றில் 41.8 சதவிகிதமும் நீர்உள்ளது.