தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி தேனியில் அவரது உருவப்படத்திற்கு மாலையணி வித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன், தேனி ஒன்றியக் குழுத் தலைவர் சக்கரவர்த்தி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, தாலுகா செயலாளர் இ.தர்மர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன், அன்பு வடிவேல், திமுக நகர் செயலாளர் நாராயண பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.