தஞ்சாவூர், அக்.16 - தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு அருகே வடுகக் குடியை சேர்ந்தவர் வாழை விவசாயி மதியழகன். கொரோனா காலத்தில் வாழை விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வாழைப்பழங் கள் தோட்டத்திலேயே பழுத்து அழுகி வீணாகிப் போயின. இதையடுத்து மதிய ழகன் வீணாகும் வாழைப் பழங்கள் பிறருக்கு பயன் பெற வேண்டும் என எண்ணி, தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் உள்ள நோயாளி களுக்கு இலவசமாக வழங் கினார். அப்போது முதல் வாழைப்பழங்களை மருத்து வக் கல்லூரிக்கு இலவச மாக வழங்குவதை மதிய ழகன் வாடிக்கையாக வைத் துள்ளார். அதன்படி சுமார் 2.50 டன் அளவிலான வாழைத் தார்களை லோடு ஆட்டோ வில் ஏற்றி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனிடம் நோயாளிகளுக்காக இலவச மாக வழங்கினார். பழங் களை பெற்றுக் கொண்ட முதல்வர், நிலைய அலுவ லர் செல்வம் உள்ளிட்டோர் விவசாயி மதியழகனை பாராட்டினர். இதுகுறித்து விவசாயி மதியழகன் கூறுகையில், “வாழை விலை ஏற்றமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அதிகளவில் வாழைத்தார்கள் வீணாகு வதால் யாருக்கும் பய னில்லை என்பதால், மற்றவர் களுக்கு பயன்பெறும் வகை யில் இலவசமாக வழங்கி வருகிறேன். தமிழக அரசு வாழை விவசாயிகளிடம் இருந்து வாழைப்பழத்தை கொள் முதல் செய்து, அரசு பள்ளி யில் உணவு நேரங்களின் போது வழங்கினால், மாண வர்களுக்கு சத்தானதாக வும், விவசாயிகளுக்கு வரு வாயும் கிடைக்கும். இது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.