districts

img

உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை ஆணைய தலைவரின் கருத்துக்கேட்பு கூட்டம்

நாகர்கோவில், டிச.20- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட் டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட் டுள்ள மாநகராட்சிகள்,  நகராட்சிகளின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துக் கள் மீதான நான்கு மாவட்டத்திற்குட் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தலைவர்  முனைவர் வெ.பழனிகுமார் தலைமை யில், திங்களன்று (டிச.20) நடைபெற்றது. இக்கருத்துக் கேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவர் முனைவர் வெ.பழனிகுமார், மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சி பிரதி நிதிகள், பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களின் கருத்துக்களை கேட்ட றிந்தார், பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதிகளை ஒருங்கி ணைப்பு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2017 -ஆம் ஆண்டு சட்டத்தில் 13  சட்டப்பிரிவுகள், தமிழ்நாடு மறுவரை யறை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து  15 விதிகள்  வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் அடிப்படை யில், வார்டுகள் பிரிப்பதை எந்தெந்த  வழிகாட்டுதலின்படி கடைபிடிக்க  வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரைவு வார்டு மறுவரையறை கருத்துக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவி லும் வெளியிடப்பட்டு, அக்கருத்துக்க ளின் மீது அரசியல் கட்சிகள்/பொது  மக்களின் ஆட்சேபணைகள்/ கருத்துக் கள் தொடர்பான மனுக்கள் 20.12.2021 வரை பெறப்பட்டன. அரசியல் கட்சிகள்  பிரதிநிதிகள்/ பொது மக்கள் இக்கூட்டத் தில் கலந்து கொண்டு ஆட்சேப ணைகள்/கருத்துக்களை நேரடியாக  தெரிவித்தனர். அவர்களுடைய கருத் துக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைளை மேற்கொள் ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவரிடம் கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த அரசியல்  கட்சி பிரதிநிதிகள்/பொதுமக்களிட மிருந்து 12 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  மேலும், 20.12.2021 அன்று முதல் 24.12.2021 வரை ஆட்சேபனைகள்/ கருத்துக்கள் மனுக்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதி களிடமிருந்து பெறப்படும். இம்மனுக் களை பரிசீலனை செய்து 24.12.2021 அன்று உரிய நடவடிக்கை மேற் கொண்டு மறுவரையறை ஆணையத் திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப  வேண்டுமெனவும், அந்தந்த மாவட்ட  ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர், ஆளூர் ஆகிய பேரூ ராட்சிகளை நாகர்கோவில் மாநகராட்சி யுடன் இணைத்து மாநகராட்சியின் எல்லையினை விரிவாக்கம் செய்தும்,  கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம்  ஆகிய பேரூராட்சிப் பகுதிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சி யினை புதியதாக உருவாக்கியும், எல்கை விரிவாக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நாகர்கோவில் மாநக ராட்சிக்கு 52 வார்டுகளும்,

புதியதாக  தோற்றுவிக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சிக்கு  33 வார்டுகளும்  என நிர்ணயம் செய்தும் அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கன்னி யாகுமரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை இன்று (திங்கள்) பதிவு செய்தார்கள். அவர்களது பதிவுகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்தார். மேலும், திருநெல்வேலி, தூத்துக் குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்க ளின் நகராட்சிகள் மறுவரையறைப்படுத் தியது குறித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில்,  தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் எ.சுந்தரவல்லி, மறு வரையறை உறுப்பினர் மற்றும் நக ராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன் னையா, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மா.அரவிந்த் (கன்னியாகுமரி), வே. விஷ்ணு (திருநெல்வேலி), டாக்டர்.கி. செந்தில்ராஜ் (தூத்துக்குடி), ச.கோ பால சுந்தரராஜ் (தென்காசி), மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், நாகர்கோவில் மாநகராட்சி  ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், நான்கு மாவட்ட  அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

;