திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் 2-வது வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின்படி நவீன பொதுக்கழிப்பறை கட்டுவதற்கு ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கழிப்பறை கட்டுமானப் பணிகள் துவக்க நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பிரதிபா கனகராஜ்,செயல் அலுவலர் செல்வராஜ் , துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, பதிவறை எழுத்தர் ராமமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எஸ்.ஜெயராஜ், வனஜா, கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.