மதுரை, ஜூன் 8- தென் மாவட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெற மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனை பெரிதும் பயன் பட்டு வருகிறது. தினசரி 5 ஆயிரம் வெளி நோயாளி கள் வந்து செல்கின்றனர். 2500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெறு கின்றனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக் காக அரசு ராஜாஜி மருத்து வமனை கட்டிடங்கள் விரி வாக்கம் செய்யப்பட்டு வரு கிறது. அண்ணா பேருந்து நிலையத்தில் அவசர சிகி ச்சை பிரிவும் மருத்துவக் கல் லூரி வளாகத்தில் மூளை, நரம்பு சம்பந்தப்பட்ட மருத் துவ அறுவை சிகிச்சை பிரிவு, குடல், கல்லீரல், இரைப்பை சம்பந்தப்பட்ட மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு என்று 6 வகையான உயர் சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் ஜைக்கா நிறுவன நிதியுதவி யுடன் 7 தளங்களுடன் கூடிய ‘டவர் பிளாக்’ கட்டுமானப் பணி கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டி டத்திற்காக பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கட்டப் பட்ட பழைய முகப்புக் கட்டி டம் பல்வேறு சர்ச்சை களுக்கு மத்தியில் இடிக் கப்பட்டு. புதிய அறுவை சிகிச்சை அரங்குகள், அதி நவீன மருத்துவ கருவிகள், புதிய சிகிச்சை அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவக் கட்டமைப்பு சர்வதேசத் தரத்தில் அமைக் கப்படுகின்றன. மொத்தம் ரூ.265 கோடி மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நோயாளிகள், ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவ ஆய்வுகளுக்கு அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, ஒரே கட்டிடத்திலே 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைகின்றன. தென் தமிழகத்திலே முதல் முறையாக, 23 அறுவை சிகிச்சை அரங்குகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஒரே கட்டிடத்தி லேயே அமைகிறது. கட்டுமானப் பணி முடி யும் தருவாயில் உள்ள நிலை யில் வரும் ஆகஸ்ட் மாதம் செயல்பாட்டிற்கு வர உள் ளது.