districts

img

1739 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்

அருப்புக்கோட்டை, ஆக.1- விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்  நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு  மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமை வகித்தார். சாத்தூர் சட்டப்  பேரவை உறுப்பினர் ரகுராமன் முன்னிலை  வகித்தார். வருவாய்-பேரிடர் மேலாண் மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 486 மாணவர்கள்,  426 மாணவிகள் என 912 நபர்களுக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 345 மாணவர்கள், 482 மாணவிகள் என  827 நபர்களுக்கும் ஆக மொத்தம் 1739 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலு வலர் (பொ) முத்துக்கழுவன், நகர்மன்றத்  தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக் கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி  ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா (அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரை ராஜ்(சாத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.