மதுரை, மார்ச் 13- மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை திங்களன்று 34,819 பேர் தேர்வெழு தினர். 1,669 பேர் தேர்வெழுத வர வில்லை. விருதுநகர்: பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த 23368 மாணவ, மாணவிகள் 97 மையங்க ளில் எழுதினர். விருதுநகர் தங்க சாமி பெரியம்மாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய் தார். தேனி: தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் மொத்தம் 15ஆயி ரத்து 552 பேர் 56 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. திங்களன்று நடைபெற்ற தேர்வில் 533மாணவர்கள், 501 மாணவிகள் என மொத்தம் ஆயி ரத்து 34 பேர் தேர்வு எழுதவர வில்லை. 13 ஆயிரத்து 418 பேர் தேர்வெழுதினர் இராமநாதபுரம்: இராமநாத புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி கள் 70 , அரசு உதவி பெறும் பள்ளி கள் 37, மெட்ரிக்.பள்ளிகள் 52, மாதிரி பள்ளி 1 என 160 மேல்நிலைப் பள்ளிகள் 65 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 930 மாணவர்கள், 8 ஆயி ரத்து 147 மாணவிகள் என 16 ஆயி ரத்து 77 பேர் தேர்வு எழுதினர். இராம நாதபுரம் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டா மாண்டு அரசு பொது தேர்வை 69 அரசுப்பள்ளிகள் உட்பட 163 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7,594 மாணவர்கள், 8,938 மாணவி கள் என மொத்தம் 16,532 பேர் 78 தேர்வு மையங்களில் தேர்வெழுத்தி னர். 241 பேர் தனித்தேர்வர்களாக வும் தேர்வு எழுதுகின்றனர். திங்க ளன்று நடைபெற்ற தேர்வில் 7,220 மாணவர்கள், 8,396 மாணவியர்கள் என மொத்தம் 15,616 பேர் தேர்வு எழுதியுள்ளனர். சிவகங்கை நக ராட்சிக்குட்பட்ட மன்னர் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தை ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். தேர்வு எழுதிய மாணவ, மாண விகள், தமிழ் மொழித்தாள் தேர்வு பொதுவாக எளிமையாக இருந்த தாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாகவும் புரிந்து கொண்டு பதிலளிக்க சிரமமாக இருந்ததாகவும், அடிக்கடி கேட்கப் படும் கேள்விகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள் ளனர். தமிழகம், புதுச்சேரியில் திங்க ளன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது. பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத வரவில்லை. தனித் தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வெ ழுத வரவில்லை என பள்ளிக்கல் வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.