திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டி, இடையபட்டி, ஊராளிபட்டி மற்றும் பரளிபுதூர் ஊராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வத்திபட்டியில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்கவுன்சிலர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். திமுக நத்தம் நகர செயலாளர் ராஜ்மோகன், யூனியன் ஆணையாளர்கள் முனியாண்டி, மலரவன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சாத்திபவுர், அழகிநேரு, தேனம்மாள் தேன்சேகர், செளந்திரராஜன், வெள்ளைத்தாய் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.