நத்தம், மார்ச் 6- திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன் பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோ ணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறன்று ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது. ஜல்லிக்கட்டில், திண்டுக்கல், அலங்கா நல்லூர், பாலமேடு, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 45 மாடு பிடி வீரர்கள் காயமடைந்த னர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் திண் டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டை முன் னிட்டு 200க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர்.