தூய்மைப் பணிககளை தனியார்க்கு தாரைவார்க்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு)சார்பில் திங்களன்று இராஜபாளையம் நகராட்சி முன்பு பெருந்திரள் முறையீடுநடைபெற்றது. கிளைச் செயலாளர் கே.பாலு, மாவட்டப் பொதுச் செயலாளர்ஆர்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.