districts

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு நவ.28, 29-ல் முதல்வர் வருகை

பெரம்பலூர், நவ.25-  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரியலூர் மாவட்டம், செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறுகிறது.  இதுகுறித்து, தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் - அரிய லூர் மாவட்டச் செயலாளர் சா.சி.சிவ சங்கர் - பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்தி ரன் ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூர், அரிய லூர் மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பெரம்ப லூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தும், முடிவுற்ற பல்வேறு பணிகளை துவக்கி வைத்தும், தமிழக முதல மைச்சர் சிறப்புரையாற்றுகிறார்.  நவம்பர் 28 அன்று 11.00 மணி யளவில், திருச்சியில் இருந்து கார் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழக முதலமைச் சருக்கு, பெரம்பலூர் மாவட்ட எல்லை யான பாடாலூரில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, தமிழக முதலமைச்சரை வரவேற்க, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகி கள், தலைமை செயற்குழு உறுப்பி னர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்கள், மாவட்ட அனைத்து அணி களின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், பொதுமக்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனை வரும் திரளாக கலந்து கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள் ளனர்.