திமுக பெரம்பலூர் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா.எம்.பி., போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சிறப்புரையாற்றினர்.