பெரம்பலூர், டிச.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது.
இம்மாநாடு, பெரம்பலூரில் தோழர்கள் என்.சங்க ரய்யா - சீத்தாராம் யெச்சூரி நினைவ ரங்கத்தில் செவ்வாய் மற்றும் புதன் (டிச.3,4) ஆகிய நாட்களில் நடைபெறு கிறது. மாநாட்டின் முதல் நாளான செவ்வா யன்று எழுச்சி பேரணியுடன் மாநாடு துவங்கியது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பிருந்து இப்பேர ணியை, மாவட்டக் குழு உறுப்பினர் எம். கருணாநிதி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி செங்கொ டியை ஏற்றினார்.
முன்னதாக தோழர்கள் முருகே சன், கணேசன் ஆகியோரின் நினைவு ஜோதி, அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டது. மாவட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் தோழர் முரு கேசனின் உருவப்படத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்ல துரையும், தோழர் கணேசன் படத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். அகஸ்டினும் மாலை அணிவித்தனர். ஜோதி பயணத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ் டின் துவங்கி வைத்தார். இப்பயணம் நான்கு ரோடு, துறைமங்கலம் வழி யாக காந்தி சிலையை வந்தடைந் தது. மாநாடு நடைபெறும் மண்டபத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.நம்புராஜனிடம் ஜோதியை ஒப்படைத்தார்.