பெரம்பலூர், டிச.11- வெயில் இலக்கிய வட்டம் சார்பில் எழுத்தாளர் க.மூர்த்தி மொழிபெயர்த்த ‘ஆரண்ய தாண்டவம்’ எனும் நூல் வெளி யீட்டு விழா பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள ஆர்சிஆர் கூட்ட அரங் கில் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் அகவி வரவேற்றார். மருத்துவர்கள் அறிவழகன் டைக்கோ, பெரம்பலூர் க.அன்பரசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மதுரை கனவு இணைய இதழ் ஆசிரியர் மதி கண்ணன் நூல் அறிமுக உரையும், பொன்னு லகம் புத்தக நிலையத்தின் திருப்பூர் குணா பதிப்பாளர் உரையும் ஆற்றினர். ரோவர் கல்வி குழும தலைவர் கே.வரதராஜன் தலைமை வகித்தார். புதுச்சேரி பல்கலைக் கழக முனைவர் த.மார்க்ஸ், ‘‘ஆரண்ய தாண்டவம்’’ நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். மொழி பெயர்ப்பாளர் க.மூர்த்தி ஏற்புரையாற்றினார்.