districts

img

தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் வாழ்த்து

புதுச்சேரி,மார்ச் 12- புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வாலிபர் சங்கம்  சார்பில் பாகூரில் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாகூர் கொம்யூன்குழுவின் சார்பில் பெரியார் நகரில் நடைபெற்றது. மாநில நிர்வாகி சிந்து தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு,  பாதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பாராட்டியும் ஊக்கப் படுத்தும் வகையில் எழுது பொருட்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் தலைவர் அஜித்குமார், செய லாளர் ஜெயராஜ், நிர்வாகிகள் தமிழ் ஒளி,ஆதி,பிரவீன், பாரி, ஆனந்த், இரு மலர் வாசம், வர்ணிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.