புதுக்கோட்டை, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து 5-ஆவது புதுக் கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடத்துகிறது. வெள்ளியன்று (ஜூலை 29) காலை 9 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு தலைமை வகிக்கி றார். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதாபாண்டே, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் கி.கருணா கரன் ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். விழாவில் கலந்துகொண்டு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்த கத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதல் விற்பனையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். விழாவில் நாடாளு மன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அறி வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.
ஆர்.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
மாலையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். எழுத்தா ளர் நாறும்பூநாதன் கருத்துரை வழங்குகிறார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தி னர் கௌரவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. புத்தகத் திருவிழா அரங்குகள் அமைப்பு மற்றும் விழா ஏற்பாடு களுக்கான பணிகளை வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆட்சியருடன் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) இரா.தமிழ்ச்செல்வி, நக ராட்சி ஆணையர் எஸ்.கருணா கரன் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்..
100 அரங்குகள், ரூ.3 கோடி விற்பனை இலக்கு
புத்தகத் திருவிழா குறித்து புதுக்கோட்டையில் புதனன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. விழா ஒருங்கிணைப்பா ளர்களான தங்கம்மூர்த்தி, நா.முத்து நிலவன், அ.மணவாளன், ஆர். ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ் ணன், எம்.வீரமுத்து, எம்.முத்துக் குமார், டி.விமலா ஆகியோர் கூறி யதாவது: புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழையைச் சமாளிக்கும் வகையில் பந்தல் உள் ளிட்ட வசதிகளும் செய்யப்பட் டுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை யிலும் மாலையிலும் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவுகள், அறி வியல் நிகழ்ச்சிகள், கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்களுடன் 100 அரங்கு களில் லட்சக்கணக்கான புத்தகங் கள் பார்வைக்கு வைக்கப்படுகின் றன. கீழடி உள்ளிட்ட சிறப்பு அரங்கு களும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. 10 முதல் 30 சதவிகிதம் வரை கழிவுகளில் புத்தகங்கள் விற்ப னைக்காக காத்திருக்கின்றன. புத்த கங்களின் விற்பனை இலக்காக ரூபாய் 3 கோடி நிர்ணயிக்கப்பட் டுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்பு கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு விடுதிகளின் சார்பில் புத்தகங்கள் வாங்குவதற்கும் மாவட்ட நிர்வா கம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களையும் வாக னங்களில் அழைத்துவந்து கண் காட்சியை பார்வையிடவும், புத்த கங்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டு மல்லாது அருகில் உள்ள மாவட்டங் கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தகத் திரு விழாவிற்கு எழுத்தாளர்கள், கலை ஞர்கள், வாசகர்கள் வருகைதர உள் ளதாக தெரிவித்தனர்.