districts

img

நாய்க் கடிக்கு உள்ளாகும் பொதுமக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள அக்னி பஜார் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அக்னிபஜார், அவுலியா நகர், எல்.என்.புரம், காந்திநகர், எம்ஜிஆர் நகர், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. சில சமயங்களில் பொதுமக்கள் நாய்க் கடிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.