districts

இந்தியா கூட்டணியின் வெற்றி கொண்டாடக் கூடியதே! அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து

புதுக்கோட்டை, ஜூன் 9 - இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி கொண்டாடக் கூடியதே என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.  புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி யில், “தனித்து வருவோம் என்று  சொன்ன வர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள். கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்களால் ஆட்சியை நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நிச்சயமாக இது நிலைத் திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக உள்ளது. இந்தியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்தவொரு தவறும் கிடையாது. இந்த மகத்தான வெற்றி மகிழ்ச்சியான ஒன்றுதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் 40-க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து  40-க்கு 40 என்ற சபதத்தை தமிழ்நாட்டில் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.  

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளர். ஆனால் அந்தக் கட்சிக் குள் என்னென்ன நடக்கிறது என்பது அவ ருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அதி முகவை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால், திமுகவை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போ கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குற்றவாளிகளை பாஜக சேர்த்து வரு கிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கு பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்துதானே தவிர, தனித்து வாங்கியதாக நாங்கள் கருதவில்லை. எங்க ளது கூட்டணி எப்போதும் பெற்றுள்ள வாக்கு களை நாங்கள் பெற்றுள்ளோம்” என்றார்.