புதுக்கோட்டை, நவ.30- கல்லூரி மாணவியை ஏமாற்றி திரு மணம் செய்து, சண்டை ஏற்பட்டபோது மண் ணெண்ணெய் ஊற்றிக் கொன்ற கண வருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகேயுள்ள சாத்தனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (32). ஏற்கெனவே திருமண மாகி இரு குழந்தைகள் உள்ள இவர், 2015- ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்த திருச்சி வேலாம்பட்டியைச் சேர்ந்த சேது (23) என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பின்னாளில் தெரிய வந்த சேது, தனது கணவர் செல்வராஜுவிடம் கேட்டபோது, இவர்கள் இருவருக்கும் தக ராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 அக்டோ பர் 28-ஆம் தேதி வீட்டிலிருந்தபோது இரு வருக்கும் தகராறு ஏற்பட்டு, செல்வராஜ், சேது மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சேது, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 12 நாட்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து செல்வராஜு வைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர்.சத்யா செவ்வாயன்று கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறை தண்டனை யும் ரூ.2 லட்சம் அபராதமும், ஏமாற்றிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை யும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.