districts

img

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்

உதகை, டிச. 10- உதகையில் போக்குவரத்துத் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு 14 ஆவது ஊதிய பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணபயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 17ஆம்  தேதி முதல்  போக்குவரத்து தொழிலாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதையொட்டி உதகை மத் திய பேருந்து நிலையத்தில் ஆயத்தக் கூட் டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு தொமுச போக்கு வரத்து மண்டல  பொது செயலாளர் நெடுஞ் செழியன் தலைமை வகித்தார். இதில், மாநில பொருளாளர் நடராஜ், முன்னாள் பொது செயலாளர் ரத்தினவேல்,சிஐடியு போக்கு வரத்து மண்டல துணைப் பொது செயலா ளர்கள் கனகராஜ், கணேசன், ஏஐடியுசி மண்டல தலைவர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;