districts

ராசிபுரத்தில் குடிநீர் நிறுத்தம்

நாமக்கல், நவ.27- இராசிபுரம், எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தில் நவ.28 முதல் நவ.30 வரை ஆகிய மூன்று தினங்களுக்கு மகுடஞ்சாவடியில் நீரேற் றுக் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற் கொள்வதால் குடிநீர் விநி யோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் பயனாளிகளான இராசிபுரம் நகராட்சி, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பிள்ளாநல் லூர் மற்றும் அத்தனூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும், மல்லசமுத்திரம், வெண்ணந் தூர் மற்றும்  இராசிபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்க ளில் உள்ள குடியிருப்புக ளுக்கும் குடிநீர் விநியோகம் தடைபடும்.

;