8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியதை திரும்ப பெற வலியுறுத்தி திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேர வேலையை பன்னெண்டு மணி நேரமாக மாற்றம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. போராடி பெற்ற உரிமைகளை பறிப்பதாகும் எனவே தமிழகத்தில் புதிதாக இயற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலையை மீண்டும் 8 மணி நேரமாக மாற்றம் செய்திட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.