நாகர்கோவில்,டிச.31- தொடர் விடுமுறை மற்றும் புத் தாண்டை கொண்டாட தமிழக சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளில் மக்கள் குவிந்தனர்.
குமரி கடற்கரை மற்றும் திற்பரப்பு அருவிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை புரிந்தனர். திரி வேணி சங்கமம் கடற்கரை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு துறை, கடற்கரையில் உள்ள கடைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கூட் டத்தால் நிரம்பி வழிந்தன.
அருவிக்கரை ஊராட்சி பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலத்தை பார்வை யிட ஏராளமானோர் வந்தனர். பாலத்தின் கீழே பாய்ந்தோடும் பரளியாற்றில் உற் சாகமாக குளித்தனர்.
புத்தாண்டின் முதல் சூரிய உத யத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். லாட்ஜுகள், நட்சத்திர ஓட்டல்களில் ஏற்கனவே அறைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய் யப்பட்டுவிட்டன. \
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வரு கின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவர வியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் நகருக்கு வெளியே பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, ஷூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட், அவ லாஞ்சி டேம், காட்டேரி பூங்கா, டீ அருங்காட்சியகம், கேத்தி பள்ளத் தாக்கு முனை உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்றனர். கேரள, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.