districts

img

திருக்கண்ணங்குடியில் 8 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிஎம் ஆறுதல்

நாகப்பட்டினம்,  ஜூன் 8 - கீழ்வேளூர் அருகிலுள்ள திருக்கண்ணங்குடி ஊராட்சி யில் உள்ள சின்னமுக்கால் வட்டம் என்ற கிராமத்தில் 8 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி ஊராட்சி யில் உள்ள சின்னமுக்கால் வட்டம் என்ற கிராமத்தில் வயல்வெளிகளில் உள்ள  களைகளை கொளுத்தி விடும் பணிகளில் விவசாயி கள் ஈடுபட்டதாக தெரிகிறது.  அந்த தீயானது அருகிலுள்ள  வீடுகளில் பற்றிக்கொண்டது. தற்போது நூறு நாள் வேலை நடைபெற்று வருவதால், வீட்டில் யாரும் இல்லை. தீப்பிடித்த அரை மணி நேரத் திற்குள் 8 வீடுகளும் எரிந்து நாசமாயின. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு துறையினர் பெரிய வாகனத்தில் வந்த னர். ஆனால் கிராமத்தின் சாலைகள் குறுகலாக இருந் ததால் கிராமத்திற்குள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது. தீயணைப்புத் துறையின் மற்றொரு சிறிய வாகனத்தைக் கொண்டு தீய ணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். அதற்குள்ளாக 8 வீடு களும் எரிந்துவிட்டன. வீடுகளில் கட்டியிருந்த கால்நடைகள் தீயில் கருகி  உயிரிழந்து விட்டன. எட்டுக் கூரை வீடுகளிலும் இருந்த  எந்தப் பொருட்களையும் வெளியில் எடுக்க முடியா மல், சேமித்த பொருட்கள்  அனைத்தையும் இழந்து  தவிக்கின்றனர் உழைப்பாளி மக்கள். சம்பவ இடத்திற்கு உட னடியாக விரைந்து சென்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து, கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, நாகை மாவட்ட வருவாய் கோட்டாட் சியர் ஆகியோர் பாதிக்கப் பட்ட வீடுகளை பார்வை யிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.  பின்னர் அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் என்.எம்.அபுபக்கர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.