நாகப்பட்டினம், ஏப்.12 - நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரி ஊராட்சியில் உள்ள மக்கள் குடிமனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி ஊராட்சியில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்த 16 குடும்பங்கள், 26 ஆண்டுகளுக்கு முன்ன தாக வடுகச்சேரி ஊராட்சி யில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தங்க ளது வீடுகளை காலி செய்து குடிமனைப் பட்டாக்களை ஒப்படைத்துவிட்டு தனியா ருக்குச் சொந்தமான மாற்று இடத்தில் வாழ்ந்து வருகின்ற னர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக வீட்டு மனைகளை ஒப்ப டைத்து விட்டு, வேறொரு இடத்திற்கு சென்ற மக்க ளுக்கு இதுவரை அரசு குடி மனைப் பட்டா வழங்க வில்லை. ஊருக்கு மையப் பகுதியில் வாழ்ந்த மக்களை, ஊர் புறத்தில் தள்ளிவைத்து விட்டு அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தங்க ளுடைய சொந்த இடத்தை பொது காரியத்திற்காக விட்டுக் கொடுத்த அப்பகுதி ஏழை மக்கள் இன்றுவரை குடிமனைப் பட்டா இல்லா மல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் கே.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் எம்.முரு கையன், சிபிஎம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடி வேல், விவசாயிகள் சங்கத் தின் ஒன்றிய செயலாளர் என். வடிவேல், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.என்.ஜீவாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.