districts

img

வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனே மருத்துவர்களை நியமித்திடுக!

நாகப்பட்டினம், டிச.13- நாகப்பட்டினம் மாவட்  டம் வலிவலம், கொடியா ளத்தூர் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சிபிஎம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்  துவர்கள் மற்றும் செவிலி யர்கள் உடனடியாக நிய மிக்கப்பட வேண்டும். வலி வலம் கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். கால் நடை மருத்துவமனைக்கு செல்கிற பாதையை தூய்  மைப்படுத்தி கால்நடை களை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும்.  ஆதமங்கலம் - வலிவலம் இணைப்பு சாலையை செப்ப னிட வேண்டும். திருவாரூ ரில் இருந்து எட்டுக்குடிக்கு செல்லும் பேருந்து எண். 349-ஐ மகளிருக்கு கட்டண மில்லா பேருந்தாக மாற்றி தர வேண்டும். வலிவலம் ஊரா ட்சியில் உள்ள அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்தி செப்பனிட்டு தர வேண்டும். வலிவலம் - ஆத மங்கலம் இடையே நிழற்  குடை அமைத்து தர வேண்  டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி உண்ணா விரத போராட்டம் நடைபெற்  றது. கீழ்வேளூர் தாலுகா  வலிவலம், கொடியாளத் தூர் ஊராட்சியில் நடை பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய  செயலாளர் ஆர்.முத்தை யன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் சிவக்குமார், எம். என். அம்பிகாபதி, ஆதமங்க லம் ஊராட்சி மன்ற தலை வர் அகிலா சரவணன்  உள்  ளிட்டோர் கலந்து கொண்ட னர்.