districts

ஜூன் 13, 14-ல் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு

தேனி, மே 30-  முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பரா மரிக்க, கடந்த 2014-ல் மூன்று பேர் கொண்ட ‘கண்கா ணிப்பு குழுவை’ உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்  2022-ல் இரு மாநில தொழில் நுட்ப வல்லுநர்களை யும் சேர்க்க முவர்குழு, ஐவர்குழு ஆனது. 

தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய  நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு, கேரள  நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் உள்ளனர். இக்குழு கடந்த ஆண்டு  மார்ச் 27-ல் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். 

இதையடுத்து கடந்த மார்ச் 18-ல் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி செய் துள்ள, செய்ய வேண்டிய வழக்கப் பணிகள் குறித்தும், வள்ளக்கடவிலிருந்து பெரியாறு அணைக்குச் செல்லும் பாதைக்கான பணிகளையும் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்வதாக இருந்த னர். ஆனால், அப்போது தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமல்படுத்தப்பட்டதால், முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவின் ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜூன் 13, 14-ல்  கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;