தென்காசி, ஜூலை 11- தென்காசி மாவட்டம் வீர கேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ஒன்றாம் வகுப்பு பயி லும் மாணவன் மாதவன் 100 யோகாசனத்துடன் 100 திருக் குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி நேரில் வாழ்த்தி பாராட்டி னார். இந்நிகழச்சியில் ராஜ கோபாலபேரி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ஜெயந்தி, ஒன்றிய கவுன் சிலர் நான்சி டோமினிக் ராஜா, ஊராட்சி செயலர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் ராணுவ வீரர் இராமசுப்பிரமணியன், என்.எப்.எஸ். அறக்கட்டளை நிர் வாகிகள், அக்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகி கள், கலாமின் கனவுகள் நிர்வா கிகள், பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் மாஸ்டர் மருது பாண்டி, ரேவதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.