தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் கிராமத்தில் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் நினைவாக ரூ. 25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை செவ்வாயன்று(அக்.11) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.