தூத்துக்குடி, நவ.23- தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்த முன்னாள் பாஜக பிர முகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் மாணிக்கவாசபுரம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் ராஜதுரை (47). இவர் பாஜக முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு நலத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக வும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் (73) என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான் குளம் போலீசார் 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டு தல், அரசுக்கு எதிராக களங்கம் விளை விக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆடியோ வெளியீட்ட எட்வர்ட் ராஜதுரை என்பவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ டேவிட் உள்ளிட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.