தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, ‘தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 16) சைதாப்பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சைதை கிளைத்தலைவர் கி.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முனைவர் மஞ்சுளா, பேரா.முனைவர் சு.ஜெகஜீவன்ராம், தமுஎகச மாநில துணைச்செயலாளர் கி.அன்பரசன், மாவட்டச் செயலாளர் அசோக்சிங், கவிஞர்கள் சி.எம்.குமார், பாரிகபிலன், எஸ்தர்ராணி, கிளைச் செயலாளர் மு.சாலகுமார், பொருளாளர் எம்.புஜ்ஜிபாபு உள்ளிட்டோர் பேசினர்.