districts

கோவில்வெண்ணி - அம்மையப்பன் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படும் பேச்சுவார்த்தையில் உறுதி: சிபிஎம் மறியல் ஒத்திவைப்பு

மன்னார்குடி, அக்.8 - தஞ்சாவூர் - வேளாங்கண்ணி என்.எச்.67  தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணியி லிருந்து  அம்மையப்பன் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலை விரைவில் சரி செய்து தரப்படும் என்ற  வருவாய்த் துறை  சமாதானக் கூட்ட வாக்குறுதியை தொடர்ந்து  அக்.7 அன்று நடைபெறவிருந்த சாலை மறி யல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை - நாகை வரை புறவழிச்சாலை நீங்கலாக 55 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ் சாலையை அகலப்படுத்தி, புதிதாய் அமைப்பதற்கு 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது நீண்ட காலமாக கோப்புகளிலேயே அசைவின்றி கிடக்கும்  திட்டமாகும்.  தஞ்சை - நாகை - வேளாங்கண்ணி தேசிய  நெடுஞ்சாலை எண்.67, சாலை வழி சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீக சுற்றுலா தலங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையாகும். புன்னைநல்லூர் - திருவாரூர் - நாகூர் -  வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி - முத்துப் பேட்டை ஆகிய  ஊர்களில் புகழ்பெற்ற இந்து,  முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இத்தலங்களுக்கு எல்லா மதத்தின ரும் சென்று வருவதால், என்.எச்.67 சாலை  ஒரு மதநல்லிணக்க சாலையாக திகழ்கிறது.  இந்த சாலையில்தான் தமிழ்நாடு, கேரளா,  ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங் களைச் சேர்ந்தோர் பயணித்து வருகின்றனர்.

 தற்போது இந்த மதநல்லிணக்க சாலை  முழுவதும் சிதிலமடைந்து பயணிப்பதற்கு  லாயக்கற்ற சாலையாக நீண்ட காலமாக  இருந்து வருகிறது. குறிப்பாக கோவில் வெண்ணியிலிருந்து அம்மையப்பன் வரை  மிகவும் மோசமாக சிதிலமடைந்து அடிக்கடி  விபத்துகள் நிகழும் சாலையாக மாறியுள்ளது. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர புதிதாக சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம், கொரடாச்சேரி ஒன்றியக் குழுக்கள் இணைந்து வெள்ளி யன்று, நீடாமங்கலம் பெரியார் சிலை அரு கிலும், கொரடாச்சேரி வெட்டாற்றுப்பாலம் மற்றும் அம்மையப்பன் ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டு ஆயத்த வேலைகள் நடை பெற்று வந்தன.  இந்நிலையில் நீடாமங்கலம் வருவாய் வட்டாட்சியரிடமிருந்து சமாதான பேச்சு வார்த்தைக்கான  அழைப்பு வந்ததன் பேரில்,  வியாழனன்று அன்று நீடாமங்கலத்தில் வரு வாய் வட்டாட்சியர் தலைமையில் பிற்பகல்  3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேசியநெடுஞ்சாலை திட்ட  அலுவலர், திட்ட உதவி பொறியாளர், மன்னார்குடி-நீடா மங்கலம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நீடாமங்கலம், கொரடாச்சேரி இடைக்கமிட்டி செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், 10 தினங்களுக்குள் முதற்கட்டமாக பேட்ச் வேலை செய்து முடிப்பதெனவும், மாநில நெடுஞ்சாலைத் துறை மூலமாக ஜனவரியில் நிரந்தர தார்ச் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறையினரால் வாக்கு றுதி அளிக்கப்பட்டது. இதனால் வெள்ளி யன்று நடைபெற இருந்த மறியல் ஒத்தி வைக்கப்பட்டது.