districts

img

திறந்தவெளி நெல் சேமிப்புகிடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், மார்ச்.3- திருவாரூர் மாவட்டம் குட வாசல் பேரூராட்சிக்குட்பட்ட அத்திக்கடையில் உள்ள திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவநெல் அறு வடை பணிகள் நடைபெற்று வரு கிறது. இம்மாவட்டத்தில் 500 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10.01.2022 (நடப்பு சம்பா பருவம்) முதல் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது.  மேலும் இதுவரை 73 ஆயி ரத்து 672 விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.651 கோடியே 71 லட்சத்து 88 ஆயிரத்து 567 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட் டுள்ளது. மாவட்டத்தில் தேவைக் கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவ சாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 22 நெல் சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சத்து 12 ஆயிரம் மெ.டன் நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளது என தெரி வித்தார். ஆய்வின்போது, வட்டாட்சி யர் உஷாராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.