districts

img

குடவாசல் எம்.ஜி.ஆர். அரசுக் கல்லூரியை திருவாரூர் தொகுதியில் அமைக்கக் கூடாது! மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

குடவாசல், செப்.30 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரிக் கான புதிய கட்டிடம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் என்ற இடத்தில்  தேர்வு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டுவதற் கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனை ஏற்காத கல்லூரி மாணவர்கள் மற்றும் குடவாசல் பகுதி மக்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியிலேயே கல்லூரிக்கான கட்டிடம் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர். இந்நிலையில், செப். 26 ஆம்  தேதி குடவாசல் வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டமும், செப்.28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடத்தினர். இதையொட்டி செப்.29 ஆம் தேதி முதல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யம் அருகே கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் இரா.ஹரிசுர்ஜித், மாவட்ட செயலாளர் பா.ஆனந்த் மற்றும் ஒன்றிய  தலைவர் மனோஜ், செயலாளர் சுகதேவ் உள்ளிட்டோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடை பெற்றது. மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் போராட்ட களத்திற்கு வந்து, போராட் டத்தை ஆதரித்து பேசினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, பி.கந்தசாமி மற்றும்  குடவாசல் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  பின்னர், மாணவர்கள் தங்கள்  கோரிக்கையை மனுவாக மத்தியக் குழு  உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கினர்.  முன்னதாக மாணவர்களின் கோரிக்கை களை ஆதரித்து நன்னிலம் தொகுதி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ், மாவட்ட கவுன்சிலர் பாப்பா சுப்ரமணியன், குடவாசல் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா  செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்த கர்கள் பேசினர்.