districts

img

கீழ வெண்மணி நினைவு ஜோதிக்கு மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு

மன்னார்குடி, டிச.6- விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய 35-ஆவது மாநாட்டிற்கான கீழவெண்மணி நினைவு ஜோதிக்கு மன்னார்குடியில் செவ்வாயன்று உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.  மன்னார்குடி கீழ பாலத்திற்கு வந்தடைந்த நினைவு ஜோதி குழுவினரை விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன் தலைமையில்  வரவேற்றனர்.  மன்னார்குடி பந்தலடியில் வெண்மணி நினைவு ஜோதி குழுவினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் அகில இந்திய மாநாட்டு பிரச்சார விளக்கச் சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கே.பிரிஜா, மாநில துணைச்செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.