திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் புதன்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் சி.எழிலரசன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் என்.செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஹாஜிரா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வி.அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.