districts

img

பெரியபாளையத்தில் சர்வதேச பெண்கள் தினவிழா

திருவள்ளூர், மார்ச் 20 - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெரிய பாளையத்தில்  பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பத்மா தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் பி.சுகந்தி, மாவட்ட நிர்வாகிகள் இ.மோகனா, சசிகலா, கே.ரமா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் காவியா, மாவட்டத் தலைவர் சுவேதா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் பேசினர். முன்னதாக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சந்துரு வரவேற்றார். கிளை செயலாளர் எஸ்.டார்வின் நன்றி கூறினார்.