திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் குப்பம், தனியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளியன்று (மார்ச்.10) மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதச் செல்வி மற்றும் பெருமிதச் செல்வன் என்ற பட்டம் வழங்கி பாராட்டுச் சான்றிதழையும், புத்தகங்களையும் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.