districts

img

திருவண்ணாமலை: மேம்பாலங்கள் திறப்பு

திருவண்ணாமலை, ஏப். 7- திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.54.49 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் மற்றும் செய்யாறு உயர் மட்ட பாலத்தை காணொலிக்காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், மாநில தடகள சங்க துணைத் தலைவர் மரு. எ.வ.வே.கம்பன் ஆகி யோர் ரயில்வே மேம்  பாலத்தை பொது மக்க ளின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக அரசு பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில்வே மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர். மாநில அரசு ரூ.38.74 கோடி, ரயில்வே துறை ரூ.3கோடி என மொத்தம் ரூ.41.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. செய்யாறு-அணைக் கட்டு,  திருவத்திபுரம் - ஆரணி சாலைகள் முக்கிய மாவட்ட சாலைகளை இணைக்கிறது. இங்கு கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் மொத்த நீளம் 309.00 மீட்டராகும். இந்த பாலங்களும் மக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அ.பவன் குமார் ரெட்டி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், நெடுஞ்சாலை  கண்காணிப்பு பொறியாளர்.பழனிவேல், திருவண்ணா மலை நகரமன்றத் தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக் குழு தலைவைர் கலைவாணி கலைமணி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிகள் கலந்து கொண்டனர்.